'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். சிரஞ்சீவி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இணைந்து கசிபோவ்லி கலையரங்கில் பிரமாண்டமாக சிரஞ்சீவியின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு சிரஞ்சீவியின் சகோதரரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விழாவில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும் இவ்விழாவில் மெகா ஸ்டார் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். பல ஆண்டுகளாக சிரஞ்சீவிக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று டோலிவுடில் கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பவன் கல்யாணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை வந்தந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக மெகா ஸ்டார் ரசிகர்கள் கூறுகின்றனர். பவன் கல்யாண் கபார் சிங் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சிரஞ்சீவியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.