'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரைப்படங்களை பொறுத்தவரை காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவை திரையில் காட்டினாலே ரசிகர்களின் விசிலும் கைதட்டலும் பறக்கும். காரணம் அவரது காமெடியும் டயலாக் டெலிவரியும் வித்தியாசமானது. 2005ல் 'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டிக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் சுராஜ் வெஞ்சாரமூடு. மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி என அனைவரையும் அவர்களைப்போலவே அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார் என்றால் அது இவர்தான்.
அவ்வளவு ஏன் ஒரு படத்தில் மம்முட்டியையே, மம்முட்டி போல நடிக்கச்சொல்லி ட்ரில் வாங்குவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. நகைசுவை நடிகர்தானே என என்று மட்டும் தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்.. 2013ஆம் வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர்தான். அதிரடி நகைச்சுவை நடிகரான சுராஜ் இந்த விருதை பெற்றிருப்பது 'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான். தொடர்ந்து காமெடி, குணச்சித்திரம் என இரட்டைக்குதிரைகளில் பவனிவரும் சுராஜ் இன்று தனது 39வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்ப்பிடத்தக்கது..