பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் 12 ஆம் வகுப்பில் சாதனை மதிப்பெண் பெற்ற மாணவர்கள்களுக்கான 36 வது ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது. இவ்விழாவில் சிவகுமார் பேசும்போது: "பல்வேறு சிரமங்களிலிருந்து தடைகளை உடைத்து முன்னேறியுள்ளீர்கள் இந்த வகையில் நான்தான் உங்களுக்கு முன்னோடி என்பேன். கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் உலகில் எந்த மூலையிலும் ஜெயிக்க முடியும். புழுதி மணல் பரப்பி அ.ஆ எழுதிய என் பள்ளிப் பருவம் இப்போது என் நினைவுக்கு வந்தது. அப்போது சிலேட்டு கூட இல்லாமல் இருந்தேன். சிலேட்டு வாங்க வசதியில்லாமல் இருந்தேன்..
கல்வியும் ஒழுக்கமும் முக்கியம். 57 ஆண்டுகளாக என் நாக்கில் டீ, காபி பட்டதில்லை. டீ, காபி சாப்பிடா விட்டால் உயிர் போய் விடுமா என்ன? எனக்குத் தெரிந்து உங்களுக்கு இருவர் பற்றி இரு உதாரண புருஷர்கள் பற்றி மட்டும் கூறுகிறேன்.
தமிழகத்தின் கடைக் கோடியில் ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக பிறந்து காலையில் பேப்பர் போட்டு படித்தவர் அப்துல் கலாம். திருச்சியில் கல்லூரி விடுதியில் அசைவ சாப்பாடு 18 ரூபாய், சைவ சாப்பாடு 14 ரூபாய், 4 ரூபாய் மிச்சப்படுத்த சைவமானவர் அவர். அப்போது சைவமானவர் இன்று வரை அவர் சைவம்தான். ஜனாதிபதி மாளிகையில் தன் உறவினர் தங்க சலுகையிருந்தும் அதற்கான செலவை தன் சொந்தப் பணத்தில் கொடுத்தவர். அவர் ஒரு உதாரண புருஷர்.
இன்னொருவர் சீனிவாச சாஸ்திரி. சாதாரண ஏழை பிராமணராக வலங்கைமானில் பிறந்தவர். சர்ச்சிலின் ஆங்கிலப்பேச்சில் குறை கண்டு அவருக்கு கடிதம் எழுதினார். தன் ஆங்கிலப் பேச்சில் குறை கண்டவரை சர்ச்சில் அழைத்த போது இங்கிலாந்து சென்று நேரில் குறை கண்டு கூறியவர். ஆங்கில இலக்கண நூல் தயாரித்த குழுவில் சர்ச்சில் இவரையும் சேர்த்தபோது அங்கும் பல குறைகள் இருப்பதைக் கண்டு பிடித்தவர். அப்படிப்பட்டவர் காந்திக்கும் குறை கண்டார். காந்தியின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பிறகு அதை கை விட்டவர். வாழ்ந்தால் இவர்களைப் போல வாழ வேண்டும்." இவ்வாறு சிவகுமார் கூறினார்.