தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை முதலில் சிவகார்த்திகேயனே சொந்தமாகத் தயாரிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கவில்லையாம். சிவகார்த்திகேயனின் நண்பரும், அவருக்கு வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜா என்பவர்தான் தயாரிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான கால்ஷீட் நமக்குத்தான் என இதற்கு முன் அவரை வைத்து படம் தயாரித்த சில தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த வாய்ப்பு அவருடைய நண்பருக்குப் போய்விட்டது.
நாளை காலை 11 மணிக்கு அந்த புதுப் பட நிறுவனம் பற்றியும், படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் நாயகி ஆகியோரைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம். இந்தப் படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட கதைதான் என்கிறார்கள். சிவகார்த்திகேயனின் நண்பரே இந்தப் படத்தைத் தயாரித்தாலும், படத்தை இணைந்து தயாரிக்க சில முன்னணி நிறுவனங்களும் போட்டி போடுகிறதாம். அதோடு வினியோகஸ்தர்கள் இப்போதே படத்திற்கான அட்வான்ஸ் தொகையைக் கொடுக்கக் கூட தயாராக இருக்கிறார்களாம்.
விஜய் டிவியிலிருந்து வெளிவந்து இன்றைக்கு முன்னணி நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் நாளை அறிவிக்க உள்ள புதிய படத்தின் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பார் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து முடித்துள்ள 'ரஜினி முருகன்' ஜுலை மாதத்தில் வெளியாக உள்ளது.