பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
விக்ரம் தற்போது 'கோலி சோடா' விஜய் மில்டன் இயக்கத்தில் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'மர்ம மனிதன்' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்போது இந்த புதிய படம் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தை முதலில் தாணுதான் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால், 'கந்தசாமி' படத்தின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக விக்ரம், 'மர்ம மனிதன்' படத்தை ஐங்கரன் நிறுவனத்திடம் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் ஆனந்த் சங்கரையும் 'அரிமா நம்பி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தியதே தயாரிப்பாளர் தாணுதான். அவரும் விக்ரம் பேச்சைக் கேட்டு தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரான தாணுவிடமும் அது பற்றி சரியாக விளக்கம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போது படப்பிடிப்புக்கு கிளம்பத் தயாராக இருந்த படக் குழுவினர் தாணுவின் புகாரினால் கிளம்பாமல் நின்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். தற்போது இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. அதன் பிறகுதான் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள். ஏற்கெனவே விக்ரம் நடித்து வரும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் , விக்ரமுக்கும் பிரச்சனை வந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில காலம் தடைபட்டது. தான் நடிக்கும் படங்களில் சமீப காலமாக விக்ரம் தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.