ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை காஜல் அகர்வால் விஷாலுடன் மரக்காணம் அருகே ஓரியூர் என்கிற இடத்தில் பாயும்புலி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று போன போது. தன் படப்பிடிப்பு இடத்தினை அடைந்து காரிலிருந்து இறங்கி கேரவானுக்குப் போகிற அந்த ஒரு கணத்தில் அங்கு சாலையோரம் நின்றிருந்தஒரு கார்மீது இன்னொரு கார் மோதியது. அதிர்ந்து போனவர் ஸ்தம்பித்து நின்று இருக்கிறார்.சற்று தாமதித்து இருந்தால் இவரது கார் மீது வந்த கார் மோதியிருக்கும். ஒரு கணம் ஆடிப் போனவர். நம் நாட்டு மக்கள் சாலை விதிகளை மதிப்பதில் இவ்வளவு மூடர்களாக இருக்கிறார்களே என்று வேதனைப்பட்டிருக்கிறார். நாள் முழுக்க படப்பிடிப்பில் கலந்து கொண்ட போதும் காலையில் கண்ட அந்தக் காட்சி அடிக்கடி மனக்கண்முன் வந்து கொண்டே இருந்ததாம் அவருக்கு