இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சற்று இடைவெளிக்குப் பின் ஜீவன் நடிக்கும் படம் அதிபர் .அவருடன் இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். எப்போதும் நெகட்டிவ் நிழலுள்ள பாத்திரத்தில் நடிப்பவர் ஜீவன். அந்த நிழல் நிஜத்திலும் தன் மீது விழுந்துள்ளதாகக் கூறுகிறார். அதிபர் ஆடியோ விழாவில் ஜீவன் பேசும் போது " நான் கெட்டவன்இல்லை .நடிப்புக்காக நான் அவனில்லை படத்தில் கூட நான் பெண்களை ஏமாற்ற மாட்டேன்.அவர்கள்தான் என்னிடம் ஏமாறுவார்கள். அதிபர் படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்த போது கனல் கண்ணன் நன்றாகப் பழகினார். நான் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்.ஆனால் உங்களைப்பற்றி கேள்விப்பட்டதே வேறு என்றேன். உடனே அவர் , நானும் உங்களைப்பற்றி கேள்விப்பட்டது வேறு. ஜீவன் திமிர் பிடித்தவர், தலைக்கனம் பிடித்தவர், ஒழுங்காக கதைகேட்க மாட்டார். அவரைப் பார்க்கவே முடியாது. யாரையும் மதிக்க மாட்டார் என்று சொல்கிறார்கள் என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் எனக்கென தி.நகரில் ஒரு அலுவலகம் வைத்திருக்கிறேன் 45 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கிறேன் யார் வேண்டுமானாலும் வரலாம். கதை சொல்லலாம்.நான் யாரையும் எளிதாக நினைத்து விட மாட்டேன் .என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள் யார் அவர்கள்? நான் நடித்து இன்னொரு படமாகஜெயிக்கிற குதிரை உருவாகிறது இவ்வாறு ஜீவன் கூறினார்.