தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷ்ணு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் இன்று நேற்று நாளை. இந்த படம் டைம் மிஷினை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. அந்த டைம் மிஷினை ஆன் செய்தால் கடந்த காலத்துக்கும் போகலாம், எதிர்காலத்திற்கும் போகலாம். இந்த மாதிரியான ஒரு கதையில் வெளியான அப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் விஜய் நடித்து வரும் புலியும், சூர்யாவின் 24 ஆகிய படங்களும் இதே டைம் மிஷினை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறதாம். இதில் விஜய்யின் புலி படம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முந்தைய ராஜா காலத்து கதையில் உருவாகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து 500 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது எதிர்காலத்துக்கு சென்று ஒரு வீரனை அழைத்து சென்று ராணி ஒருவருக்கு சவாலாக இருக்கும் படைத்தளபதியை முறியடிக்கும் கதையாம். ஆக, டைம் மிஷின் மூலம் நிகழ்காலத்தில் இருந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஒரு கதை பண்ணியிருக்கிறார் சிம்புதேவன். இதேபோல்தான் சூர்யாவின் 24 படமும் நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என மூன்று காலங்களிலும் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறதாம். இவைதவிர கோலிவுட்டில் இன்னும் எத்தனை படங்கள் இதே டைம் மிஷின் கதைகளில் உருவாகிக்கொண்டிருக்கிறதோ? விரைவில் அந்த தகவல்களும் வெளிவரும்.