டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமந்தா எவ்வளவு அழகு என்று நமக்குதானே தெரியும், ஆனால், தான் ஒன்றும் அப்படிப்பட்ட அழகியில்லை, சுமாரான ஃபிகர்தான் என்று சொல்லி அதிர்ச்சி தந்திருக்கிறார் சமந்தா. தற்போது விக்ரமுடன் 'பத்து எண்ணுறதுக்குள்ளே', தனுஷுடன் 'விஐபி 2', விஜய்யுடன் அட்லீ இயக்கும் படம், மகேஷ்பாபு தமிழில் நடிக்கும் படம், என ரொம்பவே பிஸியாக இருக்கிறார். தெலுங்கில் சமந்தாவுக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து அங்கு நடிக்கும் மற்ற நடிகைகளே ஆச்சரியப்பட்டுப் போயுள்ளார்கள். அப்படியிருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் அழகு பற்றி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் சமந்தா.
“என்னை விட அழகான பொண்ணுங்க இந்த உலகத்துல நிறைய பேர் இருக்காங்க. நான் அழகான பொண்ணே கிடையாது. எனக்கே இது நல்லா தெரியும். ஆனால், நான் ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது ஒரு பையனாவது என்னை திரும்பிப் பார்த்து ஒரு லுக் விட மாட்டானான்னு ஏங்கியிருக்கேன் தெரியுமா. ஒரு நார்மல் ஃபிகர் அளவுக்குக் கூட என்னை யாரும் ஏத்துக்கவேயில்லை. இப்படி நான் அழகா இருக்கேன்னா, அது பல முயற்சிக்குப் பிறகு உருவான அழகுதான். என்னை அழகாக்க ஹேர் ஸ்டைலிஸ்ட்டுல இருந்து மேக்கப்மேன் வரைக்கும் பலர் ஹெல்ப் பண்றாங்க. இப்ப நான் ஆசைப்படற வாழ்க்கை எனக்குக் கிடைப்பதால் ஏற்படும் சந்தோஷம் என்னை இன்னும் அழகா காட்டுதுன்னு நினைக்கிறேன்,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சமந்தா அளவிற்கு வேறு எந்த நடிகையாவது இப்படி உண்மையைச் சொல்வாரா என்பது சந்தேகம்தான்.