அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
சினிமா உலகைப் பொறுத்தவரை சிலருக்கு ஓரிரு படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்ததுமே தனித்து படம் இயக்க சான்ஸ் கிடைத்து விடும். ஆனால் பலருக்கு அத்தனை எளிதில் சினிமா கதவுகள் திறப்பதில்லை. 20 வருடங்களுக்கு மேலாக அசோசியேட் டைரக்டர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் 50 வயதுக்கு பிறகும் படம் இயக்கி ஜெயிக்கிறார்கள்.
ஆனால், சமீபகாலமாக ஓரிரு குறும் படம் இயக்கி விட்டு வரும் இளைஞர்கள்தான் அதிகப்படியான ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறைந்த பட்ஜெட் படம் இயக்கும் வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சி.வி.குமார் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் குறும் பட டைரக்டர்களுக்கு உடனடியாக சான்ஸ் கொடுக்கிறார்கள்.
இதில், சி.வி.குமாரைப் பொறுத்தவரை ஒரு பாலிஸி வைத்திருக்கிறார். அதாவது 30 வயதுக்கு கீழ் உள்ள டைரக்டர்களிடம் மட்டுமே அவர் கதை கேட்பாராம். அதுவும் அவர்கள் ஏதாவது வித்தியாசமான குறும் படங்கள் இயக்கியிருக்க வேண்டுமாம். இந்த தகுதிகள் இருப்பவர்கள் சொல்லும் கதை அவருக்கு பிடித்து விட்டால் அவரது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கிறாராம். இதனால் 20 வயது முதல் 30 வயது கொண்ட இளவட்ட இயக்குனர்களாக அவரது அலுவலகத்தை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர்.