ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்திரம் பேசுதடி மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம்கொண்டான் படங்களில் நடித்தார். அஜித்துடன் அசல் படத்தில் நடித்தார். அஜித்துடன் நடித்து விட்டதால் இனி நாம்தான் தமிழில் டாப் என்று நினைத்தார். ஆனால் அசல் படம் தோல்வி அடையவே அதன் பிறகு பாவனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தார். இப்போது கன்னட பட வாப்பும் இல்லை. சொப்பனங்கால் சுந்தரம், அட்வென்சர் ஆஃப் ஓமனக்குட்டன் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
பாவனாவுக்கு மீண்டும் தமிழில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது. இதனால் தமிழுக்கென்று புதிய மானேஜரை நியமித்து வாய்ப்பு தேடி வருகிறார். "மலையாளம், கன்னடப் படங்களில் தீவிரமாக இருந்தால் தமிழில் கவனம் செலுத்தவில்லை. எனக்கேற்ற நல்ல கதைகளும் அமையவில்லை. இப்போது தமிழில் கதை கேட்டு வருகிறேன். நல்ல கேரக்டர் அமையும்போது நடிப்பேன். அது விரைவில் நடக்கும்" என்கிறார் பாவனா.