தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரம்யா நம்பீசன் நடித்து வெளிவர இருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். இதில் அவர் பள்ளி டீச்சராக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
மலையாளம், கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தமிழில் அதிகம் நடிக்க முடியில்லை. இடையில் டமால் டுமீல் படத்தில் நடித்தேன். அது சரியாக போகாததால் யாரும் கவனிக்கவில்லை. நான் நடித்துள்ள ரெண்டாவது படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்துக்கு பிறகு என் மீது கவனம் விழும் என்று நினைக்கிறேன்.
அதில் நான் கிராமத்து பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கிறேன். வழக்கமாக சினிமாவில் வரும் ஆசிரியைகள் கலர் கலரா குடைபிடித்துக் கொண்டு மார்போடு புத்தகத்தை அணைத்துக் கொண்டு வருவார்கள். இந்த கிளிஷேக் எதுவும் இல்லாமல் யாதார்த்தமான நல்ல டீச்சராக நடித்திருக்கிறேன். கேரக்டருக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். இன்றைய கிராமத்து டீச்சர்களை பிரதிபலிப்பதாக எனது கேரக்டர் இருக்கும். என்கிறார் ரம்யா நம்பீசன்.