தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் வி.ஆனந்த் தமிழில் அப்புச்சி கிராமம் படத்தை இயக்கினார். அதன்பிறகு அவர் டைகர் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதில் சந்தீப் கிஷன், ராகுல் ரவீந்திரன், சீரத் கபூர் நடித்தனர். கடந்த 26ந் தேதி படம் ரிலீசானது. தற்போது மிகுந்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் ஆனந்த்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்புச்சி கிராமம் படத்திற்கு பிறகு டைகர் படத்தை தமிழில் இயக்குவதாக இருந்தேன். எனது குருநாதர். ஏ.ஆர்.முருகதாஸ் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தார். இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்பதால் உடனடியாக தொடங்க முடியவில்லை. தெலுங்கில் இயக்க வாய்ப்பு கூடிவந்தது. குருவிடம் சொல்லிவிட்டு தெலுங்கில் இயக்கினேன். படம் ஹிட்டாகி உள்ளது. விரைவில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறேன். இது வாரணாசி பின்னணில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. என்கிறார் ஆனந்த்.