இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி' என இப்போதைக்கு இரண்டு தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் பேசிக் கொண்டு வருகிறாராம். சமீபத்தில் 'மாரி' படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது வழக்கம் போலவே காதலைப் பற்றியும், அவருக்கு வரப்போகும் கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். காஜல் தமிழில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிகவும் அபூர்வம் என்பதால்தான் இந்த அரதப் பழசான கேள்வி. இருந்தாலும் காஜலின் பதில் புத்தம் புதிதாகவே இருந்தது.
'பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜ வாழ்வில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. நானும் காதலிப்பதாக சில செய்திகள் வந்துள்ளன. அது எனக்கும் தெரியாத செய்திதான். எனக்கும் காதலர் இருந்தால் நல்லதுதான். ஆனால், எனக்கு காதலிக்க நேரமில்லை. அதே சமயம், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை. எனக்குள் காதல் வந்தால் அதை இந்த உலகத்திற்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்துவேன். என்னை திருமணம் செய்து கொள்பவர், நேர்மையானவராகவும், நம்பிக்கையானவராகவும், புரிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.