பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
'பாகுபலி' படம் பற்றி ஏதாவது ஒரு செய்தி தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் படம் வெளிவரும் வரை படத்தைப் பற்றி கூகுள் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டுதானிருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவருக்கும் கூட படத்தில் சண்டைக் காட்சிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். தமன்னா படத்தில் இளவரசியாக நடிக்கிறாராம். ஒரு போர்க்களக் காட்சியில் அவரும் வாள் சண்டையில் ஈடுபடுவதும் படமாக்கப்பட்டுள்ளதாம். அந்தக் காட்சியில் நடிப்பதற்காக தமன்னாவுக்குத் தனிப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் வாளை எப்படிப் பிடித்துச் சண்டை போட வேண்டுமென படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பின்னும் அவர் தனியாகப் பயிற்சி எடுத்திருக்கிறார். இருந்தாலும் வாளைப் பிடிப்பதில் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் நள்ளிரவில் அதே ஹோட்டலில் தங்கியிருந்த படத்தின் நாயகன் பிரபாஸ் அறைக்குச் சென்று அவருடைய ரூம் கதவைத் தட்டியிருக்கிறார். தூக்கத்திலிருந்து அவரை எழுப்பி, எப்படி வாளைப் பிடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் முழு ஈடுபாட்டுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தமன்னாவின் வழக்கம், அவரின் தொழில்பக்தி பாராட்டுக்குரியது என்கிறார்கள் படக்குழுவினர்.