சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
இந்தியத் திரையுலகில் இதுவரை படைக்காத வரலாற்றுச் சாதனையை படைக்க 'பாகுபலி' குழுவினர் மும்முரமாக திட்டமிட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 'பாகுபலி' படத்தை மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தமிழில் எடுக்கப்பட்டுள்ள 'பாகுபலி'தான் மலையாளம் பேச உள்ளது. நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டை கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமெளலி , பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுவரை அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்குப் படங்களும்தான் டப்பிங் ஆகி அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. விஜய் நடித்த பல படங்கள் நேரடியாகவே தமிழில் வெளியாகியும் சாதனை புரிந்துள்ளன. 'ஐ' போன்ற படங்களும் நல்ல வசூலைக் குவித்துள்ளன. ஆனால், முதல் முறையாக அதிகமான திரையரங்குகள், மிகப் பெரிய வசூல் என கேரள மார்க்கெட்டில் சாதனை புரிய வேண்டும் என படத்தை வாங்கி வெளியிடும் குளோபல் யூனைடெட் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறதாம். இதுவரை ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில்லை என்கிறார்கள்.
எப்படியோ மலையாள உலகில் ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு மார்க்கெட்டிங் நடப்பதை மலையாளத் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.