ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருப்பவர் சஞ்சீவ். சீனியர் ஆர்ட்டிஸ்ட். தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது : சின்னத்திரை கலைஞர்களுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால்தான் நானும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. அப்படி வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். கதையின் நாயகனாக நடிப்பதற்குரிய கதைகளை கேட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக சீரியலில் நடிப்பதை கைவிட்டுவிட்டேன். மானாட மயிலாட சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இது மனதுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. தற்போது கதை முடிவாகியுள்ளது. விரையில் அதுபற்றிய அறிவிப்பு வரும் என்கிறார் சஞ்சீவ்.