தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்திற்கு யூ சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆந்திர மாநில தணிக்கை குழு அதிகாரி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் காக்கி நாடாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் பி.டி.ஆர்.பிரசாத் ரெட்டி என்பவர் அந்தலாலா சந்தமாமா என்ற படத்தை தயாரித்தார். படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது தணிக்கை அதிகாரி ஜி.சீனிவாசராவ் படத்துக்கு யூ சான்றிதழ் வேண்டும் என்றால் ஒரு லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் பிரசாத் ரெட்டி 10 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். அதற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஒரு லட்சம் கொடுத்ததல்தான் யு சான்றிதழ் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரசாத் ரெட்டி சி.பி.ஐயிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தணிக்கை அதிகாரி சீனிவாசராவ் கைது செய்யப்பட்டார். "சம்பந்தப்பட்ட படத்தை விதிமுறைகளின் படி தணிக்கை அதிகாரிகள் பார்க்கவில்லை. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்" என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.