டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த வாரம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இருதய அறுவவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அதன் விளைவாக அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்படுவதுண்டு. திடீரென்று அது அதிகமாகவே அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துமணை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜா அவரை அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். நேற்றும் இளையராஜா எம்.எஸ்.வியை சந்தித்தார். அவர் ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அவர் திட உணவு உண்ணலாம் என்றாலும் அதனை எம்.எஸ்.வி மறுத்து வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட இளையராஜா அவரை சமாதானப்படுத்தி தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வரச்செய்து ஊட்டி விட்டார். இதனால் எம்.எஸ்.வி சிறிது உணவு உட்கொண்டார். இன்று அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதராண வார்டுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அவரது மகன் எம்.எஸ்.வி.கோபி அருகில் இருந்த கவனித்து வருகிறார்.