இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கேடி, கல்லூரி, பையா, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற தமிழ்படங்களில் நடித்தவர் அழகுப்புயல் தமன்னா. தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் பல வெற்றி படங்களில் நடித்தவர் இந்தியிலும் கால்பதித்துள்ளார். தற்போது மூன்று மொழியில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் பாகுபலி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் தமன்னா. பாகுபலி அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் தமன்னா கூறியிருப்பதாவது, பாகுபலி படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் நான் நடித்துள்ளேன். இதற்காக வாள் சண்டை பயிற்சி எல்லாம் எடுத்து நடித்தேன். இதுபோன்று நான் எனது முந்தைய படங்களில் நடித்தது கிடையாது. பாகுபலி வெறு டயலாக் படம் கிடையாது, படம் முழுக்க ஆக்ஷ்ன் இருக்கும். நான் உள்ளிட்ட பலரும் ஆக்ஷ்ன் காட்சியில் நடித்திருக்கிறோம். நான் அநேக சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். எங்களது ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ரீன் அவ்வளவு அழகாக சண்டைக்காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாகுபலி படத்தின் மொத்த பலமே ராஜமெளலி தான். இப்படத்தில் நானும் இருப்பது நான் செய்த அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.