இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபலமான நடிகையாக பீக்கில் இருக்கும்போதே கல்யாணம் செய்து கொண்ட நடிகைகள் சந்திக்கும் பிரச்சனை தான் கொஞ்சநாள் முன்பு வரைக்கும் நடிகை அமலாபாலுக்கு இருந்து வந்தது. அதாவது திருமணத்திற்குப்பின் என்ன செய்வது..? கணவர் ஏ.எல்.விஜய் படங்களை இயக்க அவ்வப்போது வெளியே போய்விடுவார். ஆனால் எந்நேரமும் பிஸியாக நடித்திக்கொண்டிருந்த அமலாபாலின் பொழுதுபோக்கிற்கு வடிகால் வேண்டுமே.. படங்களில் நடிப்பதில்லை என்றும் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டார் அமலாபால்.
இந்தநிலையில் தான் பிரபல சேனல் ஒன்று டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றின் நடுவராக பொறுப்பேற்குமாறு அமலபாலுக்கு அழைப்பு விடுத்தது. அவரது கணவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட தற்போது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறாராம் அமலாபால். இவருடன் இணைந்து நடிகர் சிவாவும் நடுவராக பொறுப்பேற்றுள்ளார். வெறுமனே டான்ஸ் ஷோவாக மட்டும் இல்லாமல், இதில் பல சுவராஸ்யமான எபிசோடுகளும் அடங்கியுள்ளதாம். ஆராம்பகட்ட சுற்றுகளில் அமாலாபாலும் சிவாவும் நடுவர்களாக இருந்தாலும் இறுதிச்சுற்றில் தனுஷும் புனீத் ராஜ்குமாரும் நடுவர்களாக பங்கேற்க இருக்கிறார்களாம்.