அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும், இயக்குனரின் மகனாக இருந்தாலும், நடிகரின் மகனாக இருந்தாலும் நல்ல தரமான படங்களில் நடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள். ஆனாலும், சிலர் மட்டுமே அந்தத் தோல்விகளில் இருந்து மீண்டும், மீண்டும் எழ முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நடிகராக இருந்து வருபவர் ஜீவா. 'கோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு ''ரௌத்திரம், வந்தான் வென்றான், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, யான்” எனப் பல தோல்விப் படங்களில் நடித்துவிட்டார். இடையில் விஜய் நண்பனாக 'நண்பன்' படத்தில் மட்டும் ஓரளவிற்கு நடிப்பில் நல்ல பெயரை வாங்கினார். மற்ற படங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியைத் தந்தும், அவருடைய பெயரைக் குலைத்தும்தான் வந்தன.
இருந்தாலும் இப்போதும் எந்தக் கவலையையும் மனதில் ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் 'கவலை வேண்டாம், திருநாள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'திருநாள்' படத்தில் நேற்றைய, இன்றைய நம்பிக்கை நாயகி நயன்தாராவும், 'கவலை வேண்டாம்' படத்தில் நாளைய நம்பிக்கை நாயகி கீர்த்தி சுரேஷும் ஜீவா ஜோடியாக நடிக்கிறார்கள்.
'திருநாள்' படத்தில் கிராமத்து இளைஞனனாகவும், 'கவலை வேண்டாம்' படத்தில் நகரத்து இளைஞன்னாகவும் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே தனக்குத் திருப்பு முனையாக அமையும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறாராம் ஜீவா.