இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தடையறத் தாக்க, என்னமோ ஏதோ போன்ற தமிழ் படங்களில் நடித்து வரவேற்பு பெறாத ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது டோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இதனால் தனது சம்பளத்தையும் ராகுல் ப்ரீத்தி சிங் தனது வளர்ச்சிக்கு ஏற்ப உயர்த்தியுள்ளார். இதுவரை ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கி வந்த ராகுல் ப்ரீத்தி சிங் இனி மேல் ஒரு கோடி சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார். டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜாவுடன் கிக் 2 படத்தில் நடித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங், ஜூனியர் என்.டி.ஆருடன் புரூஸ் லீ படத்திலும் ராம் சரணுடன் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார். மேலும் மகேஷ்பாபுவுடன் பிரமோற்சவம் படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகியுள்ளார். டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். முன்னணி நடிகர்களின் படவாய்ப்பை பெற்றதால் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது கோடிகளில் சம்பளம் கேட்க துவங்கியுள்ளார்.