ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஒரு படம் அல்லது இரண்டு படங்களில்தான் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்கள். ஆனால் விஜயசேதுபதியோ, ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இடம் பொருள் ஏவல், பெஞ்ச் டாக்கீஸ், மெல்லிசை, நானும் ரவுடிதான். ஆரஞ்சு மிட்டாய், வசந்தகுமாரன், இறைவி, விக்ரம் வேதா என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. அதில் சில படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடிக்கிறார்.அதைப்பார்த்து ஒரே நேரத்தில் வித்தியாசமான பல கெட்டப்புகளில் எப்படி அவரால் நடிக்க முடிகிறது என்று பலரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். இதுபற்றி அவரைக்கேட்டால், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை. இந்த படங்களில் எனது காஸ்டியூம், மீசை, தாடி போன்ற கெட்டப்புகள்தான் மாறுகிறது. மற்றபடி உடல்ரீதியான மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை.
மேலும், ஒரு படத்தில் பத்து நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்தேன் என்றால், அடுத்து சில நாட்கள் கேப் கொடுத்து அதற்கடுத்து நடிக்க வேண்டிய படத்தின் கேரக்டரை மனதில் ஓட விடுவேன். அதை உள்வாங்கிய பிறகுதான் அந்த படத்தில் நடிப்பேன். இப்படி சின்னச்சின்ன இடைவெளி கொடுத்து நடிப்பதால், முந்தைய படத்தின் சாயல் அடுத்த படத்தில் வெளிப்படாது. இதை நான் அந்தந்த படங்களின் டைரக்டர்களிடம் நடித்து காட்டி உறுதி செய்த பிறகுதான் நடிக்கிறேன் என்கிறார் விஜயசேதுபதி.