பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தன் பெயரில் உலவி வரும் போலி டுவிட்டர் அக்கவுண்ட்டால், விஷமிகள் சிலர் தன் மீது வெறுப்பு ஏற்படும் வண்ணம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இயக்குநர் ஹரி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு, புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, இயக்குநர் ஹரி, போலீஸ் கமிஷனருக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஜி. ஹரிகிருஷ்ணன். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உள்ளேன். ஹரி என்ற பெயரில் படங்களை இயக்கி வருகிறேன். @DirHariOfficial என்ற பெயரில் நடைமுறையில் உள்ள டுவிட்டர் அக்கவுண்ட் எனது அக்கவுண்ட் அல்ல. அது எனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் அக்கவுண்ட். அந்த டுவிட்டர் அக்கவுண்ட் மூலம், எனது திரையுலக வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கையிலும் கெட்ட பெயர் ஏற்படும் வண்ணம், சிலர் கருத்துகளை பரவி வருகின்றனர்.