ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமூக வலைத்தளங்கள் என்பதை தங்களைப் பற்றிய தகவல்களை, எண்ணங்களை, நாம் நினைப்பவற்றை அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்தும் எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால், நமது திரையுலகத்தினர் அதை அவர்களைப் பற்றிய விளம்ரங்களுக்கும், அவர்களது படங்களைப் பற்றிய விளம்பரங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சமூகக் கருத்துக்களையும் பெரும்பாலானோர் வெளியிடுவதேயில்லை. ஒரு சிலர் மட்டுமே சமுதாயத்திற்குத் தேவையான சில கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர்.
ரஜினிகாந்த் டிவிட்டரில் பெரும் சாதனை நிகழ்த்திவிட்டார் என்று சொல்வது அவர் அவருடைய ரசிகர்களை ஏமாற்றுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. கோச்சடையான் படத்திற்காக டிவிட்டர் கணக்கை ஆரம்பித்த ரஜினிகாந்த் அதன் பிறகு பிரதரை வாழ்த்துவதற்கும், முதல்வரை வாழ்த்துவதற்கும், தனது மகள் சௌந்தர்யாவை வாழ்த்துவதற்கும், கருணாநிதியை வாழ்த்துவதற்கும், அமிதாப்பச்சனை வாழ்த்துவதற்கும், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீகுவான் யூ மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.
அவருடைய டிவிட்டர் பக்கத்திற்குச் சென்றால் ஒரு பக்கத்தைக் கூட அவரது பதிவுகள் தாண்டவில்லை. ஆயிரமாயிரம் டிவிட்டர் பதிவுகளைப் போட்டுள்ளவர்கள் மத்தியில் எதற்காக இந்த டிவிட்டர் கணக்கை ரஜினிகாந்த் ஆரம்பித்து வைத்துள்ளார் என்றே தெரியவில்லை என டிவிட்டரை அதிகம் பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கிறார்கள். லிங்கா படப்பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்த போதும் கூட அது பற்றி எதையுமே பதிவிடாதவர்தான் ரஜினிகாந்த்.
இன்று ரஜினிகாந்தைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தொட்டுவிட்டது என்பது சாதனை அல்ல, அவரது ரசிகர்களுக்கு வேதனைதான். தன்னைத் தொடரும் 20 லட்சம் ரசிகர்களுக்கு அடிக்கடி எந்த செய்தியையும் தெரிவிக்காமல் ரஜினிகாந்த் ஏமாற்றி வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று ஏதாவது செய்தி இருக்காதா என தினம் தினம் அந்தப் பக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களின் சாதாரண எதிர்பார்ப்பைக் கூட ரஜினிகாந்த் பூர்த்தி செய்யாமலே இருக்கிறார்.
எந்த விதமான எண்ணங்களையும் வெளியிடாத இந்த எண்ணிக்கை சாதனை எதற்கு ?