'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தெலுங்கு திரை உலகின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்தை, இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார்.புரூஸ் லீ என பெயரிடப்படுள்ளாதாகக் கூறப்படும் இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் துவங்க இருப்பதாக கூறி வந்த ராம் சரண், தனது பெயரில் ராம் சரண் எண்டர்டையின்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் துவங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் சார்பில் ராம் சரண் தயாரிக்கும் முதல் படம் அவரது தந்தையும் டோலிவுட் மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவியின் 150வது படமாகும். இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிரஞ்சீவியின் 60 வது பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ம் தேதி இப்படம் பூஜையுடன் துவங்கப்படுகின்றது. அப்போது இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் கொண்ட விபரங்களும் வெளியிடப்படும் என தெரிகின்றது.