ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனக்குதான் அனைத்தும் தெரியும், மற்றவர்கள் செய்வது அனைத்துமே தப்புத் தப்பானவை என அடிக்கடி ஏதாவது விமர்சனம் செய்து கொண்டிருக்கும் ராம்கோபால் வர்மா, நிஜமான சம்பவங்களை வைத்து படம் எடுத்து கல்லா கட்டுவதில் சிறந்தவர். எத்தனையோ நிஜ வாழ்கைச் சம்பவங்களை அப்படியே சொல்கிறேன் பேர்வழி என அவற்றை எந்த அளவிற்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கெடுப்பவர். மீடியாக்களின் விளம்பரத்தால் சிறந்த இயக்குனர் என அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார்.
தமிழ்நாடு, கர்நாடகா மக்களே மறந்து போன வீரப்பன் விவகாரத்தை தற்போது மீண்டும் தோண்டி எடுத்து இரு மாநில மக்களுக்கும் இடையே மீண்டும் ஒரு பகை உணர்வை வளர்க்கும் விதத்தில் 'கில்லிங் வீரப்பன்' என்றதொரு படத்தை இயக்கி வருகிறார். மேலும், அதில் வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரின் மகனான சிவராஜ்குமாரையே காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க வைத்து வருகிறார். இப்போது வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறவரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தைப் பார்த்ததுமே சமூக வலைத்தளங்களில் ஓவராக கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
நகைச்சுவை நடிகர் 'லூஸ் மோகன்' போன்று இருப்பதாகவும், அவரைப் பார்த்தால் சிரிப்பு வரும் 'காமெடி பீஸ்' போல இருப்பதாகவும் பலர் கிண்டலடித்து வருகின்றனர். வீரப்பன் கதாபாத்திரத்தில் டில்லியைச் சேர்ந்த நாடக நடிகரான சந்தீப் பரத்வாஜ் நடிக்க உள்ளார். அவருடைய புகைப்படம்தான் இந்த அளவிற்கு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. வீரப்பனைப் போன்று வெறும் மீசை மட்டும் வைத்துவிட்டால் போதுமா ? என்று அதிகப்படியான விமர்சனம் எழுந்துள்ளது.