பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு, சென்னை ஐகோர்ட், இடைக்காலத்தடை விதித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், ஜூலை மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணிக்கும், விஷால் தலைமையிலான அணிக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு நாடக நடிகர் சங்கங்கள் உள்ளிட்டோர்களை சந்தி்த்து ஆதரவு திரட்டி வந்தனர்.
ஜூலை 15ம் தேதி புதன்கிழமை என்பதால், அவ்வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைக்கு, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் , வக்கீல்கள் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும் என்று இருப்பதை மாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் தேர்தல் நடைபெற வேண்டும், வாக்காளர் விபரங்கள் அடங்கிய புத்தகத்தை வழங்க வேண்டும் என்று, நாசர், விஷால், தரப்பினர், உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தேர்தலையே தடை செய்ய வேண்டும் என்று, பூச்சி முருகன் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விஷால் தரப்பினர் மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக, 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சங்க பொதுச்செயலாளர் ராதாரவிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
3 ஆயிரம் பேர் கூடி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்த தேர்தல் தேதியை, யாரோ சில பேருக்காக, மாற்ற முடியாது என்று சமீபத்தில், ராதாரவி, ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், விஷால் தரப்பினர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவி்ட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நடிகர் சங்கம், இரண்டு வாரகால அளவிற்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
எங்களின் முதல் வெற்றி : விஷால்
ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்க தேர்தலுக்கு, ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளதே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். தனியார் டிவி சேனலுக்கு பதிலளித்த விஷால் இவ்வாறு கூறியுள்ளார்.