சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சினிமாவில் பல காட்சிகளில் கொலைகள் செய்வது இப்போது சகஜமாகி விட்டது. அதே போல தமிழ்க் கொலை செய்வதும் வாடிக்கையாகித் தொடர்கிறது. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாயிற்றே அதில் தவறு செய்யக் கூடாது என்று நினைப்பதே இல்லை. டைட்டில் கார்டில் வரும் பெயர்களில் தப்பும் தவறுமாக எழுத்துகளைப் போடுகிறார்கள். பல படங்களில் பின்னணி என்பதற்குப் பதிலாக பின்னனி என்றே தவறாக வரும்
.
யாகாவாராயினும் நாகாக்க என்று ஒரு படம் வந்துள்ளது. பரவாயில்லையே நல்ல தமிழில் தலைப்பு உள்ளதே என்று நினைத்தோம்
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்கிற குறளின் அடிப்படையிலான கதை. இக்குறளின் பொருள் என்ன தெரியுமா?
தம்மால் காக்கப் பட வேண்டிய எல்லாவற்றையும் காக்க முடியாவிட்டாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்க இல்லையெனில் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர் என்பது பொருள். நாக்கு தடித்து பேசும் தவறான ஒரு சொல்லால் சிக்கலில் மாட்டி துன்புறும் இளைஞர்கள் பற்றியதுதான் இப்படத்தின் கதையே. தலைப்புக்கேற்ற நல்லதொரு கதையை ஒரு முழுப் படமாக இரண்டரை மணி நேரம் சொல்லி இறுதியில் அந்தக் குறளைக் கொட்டை எழுத்துகளில் போடுகிறார்கள்.
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு என்று.
சொல்லிழுக்குப் பட்டு என்பதற்குப் பதிலாக சொல்லிழுக்கப் பட்டு என்று வருகிறது. இந்தத் தமிழ்க் கொலையைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு சுருக்கென்று வலிக்கிறது. யார் கவனிப்பது? பல பேருந்துகளில் கூட இப்படித்தான் தவறாகவே உள்ளது. படமெடுத்தவர்கள் முழுக்க முழுக்கத் தெலுங்கு மொழிபேசுபவர்கள் என்றாலும் தமிழ் சார்ந்த பொறுப்பாளர்கள் இதைக் கவனிக்க வில்லையா? படங்களில் யாகாவாராயினும் தமிழ் காக்க என்பது இவர்களுக்கு எப்போது புரியும்?.