கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விஷால்-காஜல்அகர்வால் இருவரும் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் பாயும்புலி. இந்த படத்தை விஷாலை வைத்து ஏற்கனவே பாண்டியநாடு படத்தை இயக்கிய சுசீந்திரன் இயக்கி வருகிறார். சத்யம் படத்தை அடுத்து விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மதுரை நகரத்தில் நடந்து வந்ததை அடுத்து சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. அங்கு விஷாலுடன் காஜல்அகர்வால் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கிறாராம் சுசீந்திரன். ஒரு வாரம் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி விட்டு நேற்று முன்தினம் கோவையில் இருந்து அவர்கள் சென்னை திரும்பினார்கள்.
ஆனால், சீதோஷ்ண நிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் நள்ளிரவு 2.10 மணிக்குத்தான் புறப்பட்டதாம். அதனால் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்து விட்ட விஷால்-காஜல்அகர்வால் இருவரும் அங்கு 5 மணி நேரம் காத்துக்கொண்டிருந்தார்களாம்.
இரண்டு சினிமா பிரபலங்கள் பயணிகள் ஏரியாவில் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த பயணிகள் அவர்களை மொய்த்துக்கொண்டதோடு, அவ்வப்போது செல்பியும் எடுத்துக்கொண்டார்களாம்.