பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஞாபகங்கள், இளைஞன் படங்களுக்குப் பிறகு பா.விஜய் நடித்த படம் தகடு தகடு. இந்த தலைப்பைதான் பின்னர் 30 ரூபாய் சிடி என்று மாற்றினர். ஆனால், எப்போதோ படப்பிடிப்பு முடிந்த அந்த படம் இன்னமும் ரிலீசாகவில்லை. அதனால் அதற்கடுத்து ஸ்ட்ராபெர்ரி என்றொரு படத்திற்கான கதையை எழுதி தானே இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார் பா.விஜய்.
இப்படி திடுதிப்பென்று அவர் இயக்குனரானதற்கு காரணம், தனுஷ் நடித்த திருடா திருடி, சுந்தர்.சியின் தலைநகரம் மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களுக்கு அவர் டயலாக் எழுதியிருக்கிறார். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் தனக்கான ஸ்கிரிப்ட்டை தானே ரெடி பண்ணி இயக்குனர் அவதாரமெடுத்து விட்டார் பா.விஜய்.
அதேசமயம், வழக்கமாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறாராம் அவர். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் கதை மனதில் ஒட்டாதபோதும் இந்த ஸ்ட்ராபெர்ரி படத்தின் கதை ரசிக உள்ளங்களில் ஒட்டிக்கொள்ளுமாம். அந்த அளவுக்கு உணர்வுரீதியான ஒரு கதையில் நடிப்பதாக கூறும் பா.விஜய், இந்த ஸ்ட்ராபெர்ரி படம் ரிலீசாகும்போது 30 ரூபாய் சிடி படத்தையும் வெளியிட்டு விடவேண்டும் என்று அதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம்.
மேலும், 30 ரூபாய் சிடி படத்தை தயாரித்துள்ள நிறுவனம்தான் தற்போது பா.விஜய் இயக்கி நடித்து வரும் ஸ்ட்ராபெர்ரி படத்தையும் தயாரிக்கிறதாம்.