ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சினிமாவில் யார் எப்போது எப்படி மேலே வருவார்கள் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இவனெல்லாம் ஒரு ஆளா என துச்சமாக நினைக்கப்பட்ட எத்தனையோ பேர் இன்று நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி குறும்பட இயக்குனராக இருந்தபோது வடிவேலுவை சந்தித்து கதை சொல்ல சென்றபோது அவரை சந்திக்க மறுத்திருக்கிறார் வடிவேலு. தன்னுடைய அறிமுகப்படமான 'சூது கவ்வும்' படத்தில் கதாநாயகனாக, தாஸ் என்ற 40 வயது கடத்தல்காரராக வடிவேலுவையே நடிக்க வைக்க எண்ணினாராம் நலன்குமாரசாமி. அப்போது வடிவேலு உச்சத்திலிருந்ததால், நலன்குமாராசாமியை பார்க்கக்கூட மறுத்துவிட்டாராம்.
வேறு வழியின்றி வேறொரு நாயகனை நடிக்க வைக்கலாம் என நினைத்து, கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து விஜய்சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் நலன் குமாரசாமி. வித்தியாசமான ஐந்து கட்டளைகளோடு கடத்தலைச் செய்யும் தாஸ் கேரக்டருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஒருவேளை அன்றைக்கு தாஸ் கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தால் ஹீரோவாகவே அவருக்கு மிகப்பெரிய 'பிரேக்' கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. எலி போன்ற படங்களில் நடித்து எனர்ஜியை வீண் அடித்திருக்க வேண்டியநிலையும் ஏற்பட்டிருக்காது.