தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கி வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து துவங்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல கோலிவுட் மற்றும் டோலிவுட் முன்னணி நடிகர்கள் ராஜமௌலியின் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கக் கூடும் என தகவல் வெளிவந்துள்ளது. பாகுபலி படத்தின் தமிழ் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சந்தித்துக் கொண்ட சூர்யாவும் ராஜமௌலியும் தங்கள் படத்திற்கான கதை தேர்வு செய்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் பாகுபலி படத்தை தமிழில் வெளியிடும் ஞானவேல் ராஜா ராஜமௌலி- சூர்யா இணையும் படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.