ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வந்த கிஷோர் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு அவர் பல படங்களில் வில்லனாக நடித்தாலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது அவர் காதலியை காணவில்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடிகார மனிதர்கள் என்ற மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வந்து வறுமையில் வாடுபவராக நடிக்கிறார். அவரது நண்பராக கருணாகரன் நடிக்கிறார். ஷெரின் என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். உமா ராவ், பாலா சிங், தயாரிப்பாளர் பிரதீப் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
"எல்லோருமே கடிகாரத்துக்கு அடிமையாக வாழ்கிறார்கள். காலையில் 9 மணிக்கு வேலைக்கு சென்று 6 மணிக்கு திரும்பும் இயந்திர வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை சூழலுக்குள் கிராமத்தில் இயற்கையோடு வாழ்ந்தவன் வந்து சிக்கிக் கொண்டால் அவன் நிலைமை எப்படி இருக்கும் என்பதுதான் படம். கிராமமும், நகரமும் கலந்த ஒரு முகம் தேவைப்பட்டது. கிஷோரிடம் கதை சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டு நடிக்கிறார்" என்றார் இயக்குனர் வைகறை பாலன்.