'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
வை ராஜா வை படத்திற்கு பிறகு தெகிடி அசோக் செல்வனுடன் இணைந்து கூட்டத்தில் ஒருவன் படத்தில் நடித்து வருகிறார் ப்ரியாஆனந்த். இதையடுத்து ஏற்கனவே அரிமா நம்பி படத்தில் நடித்தவர் அதே ஆனந்த் சங்கர் விக்ரமைக் கொண்டு இயக்கும் மர்ம மனிதன் படத்திலும் நடிப்பதாக இருந்தது.
அதுபற்றி ப்ரியா ஆனந்தே உறுதிபடுத்தியும் வந்தார். ஆனால், இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நேரத்தில், தன்னிடம் கால்சீட் இல்லை என்றொரு காரணத்தை சொல்லி வெளியேறிவிட்டாராம் ப்ரியாஆனந்த்.
ஆனால் இதுபற்றி விசாரித்தபோது, விக்ரமின் மர்ம மனிதன் படத்தின் முக்கிய நாயகியாக நடிக்கயிருப்பவர் காஜல்அகர்வால் தானாம். அவர்தான் விக்ரமுக்கு ஜோடியாம். ப்ரியா ஆனந்துக்கு ஒரு சிறிய கேரக்டர்தான் தரப்பட்டதாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த மாதிரி கேரக்டரில் நடித்தால் தனது ஹீரோயின் இமேஜ் போய்விடும் என்றுதான் வேறு காரணத்தை சொல்லி அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். விளைவு, அதற்காகவே காத்திருந்தவர் போல் இப்போது பிந்துமாதவி ப்ரியாஆனந்த் மறுத்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.