'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான இயக்கத்தில் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள 'பாகுபலி' படத்தின் வியாபாரம் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தின் தயாரிப்புச் செலவாக மட்டும் சுமார் 125 கோடி ஆகியிருக்கிறது என்கிறார்கள். அடுத்த மாதம் வெளியாக உள்ள 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடைபெற்று உள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் மேலும் 2000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறது. இதுவரை எந்த ஒரு தெலுங்குப் படமும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. 'பாகுபலி' படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்டிருப்பதால் இந்த சாதனைகள் அனைத்தும் தமிழ்த் திரையுலகத்திற்கும் பொருந்தும்.
ஷங்கர் கூட அவருடைய படங்களை தமிழில் மட்டுமே எடுப்பார். ஆனால், ராஜமௌலி சென்னையில் வளர்ந்தவர் என்பதால் தமிழிலும் இந்தப் படத்தை தனியாக படம் பிடித்திருப்பது அவருக்கு தமிழ்த் திரையுலகத்தின் மீதுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. ரஜினிகாந்த், ஷங்கர் படங்களை மிஞ்சும் அளவிற்கு 'பாகுபலி' படத்தின் வியாபாரம் 160 கோடி வரை நடைபெற்றுள்ளதால், இந்தப் படம் ஒரு சில வாரங்களிலேயே அந்தத் தொகையை எப்படியும் வசூலித்துவிடும் என்கிறார்கள். முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 25 கோடி வரை வரும் என்கிறார்கள். அதே அளவு அடுத்த சில நாட்களில் தொடர்ந்தால் படத்தின் மொத்த வசூல் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாம். அப்படி வரும் பட்சத்தில் 'எந்திரன், ஐ' படங்களின் வசூலை சர்வசாதாரணமாக 'பாகுபலி' முறியடித்துவிடும் என்கிறார்கள்.
திரைப்படம் என்பது ஒரு இயக்குனரின் மீடியம்தான் என்பதை ராஜமௌலி அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறார்.