குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
கமல் துவக்கி வைத்த "ராஜா ராணி" படம், அட்லீக்கு பெரும் ஹிட்டாக அமைந்தது. இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே, அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், அட்லீ உடன் நடிகர் விஜய் கைகோர்த்துள்ளார்.
விஜய் 59 என்று தலைப்பு இடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா, விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, நடிகர் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழாவில் ரஜினி பங்கேற்பிற்கான காரணம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு காரணம் தயாரிப்பாளர் தாணு தான் என்று தெரியவந்துள்ளது. அதாவது, அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். அதேபோல், 'அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுவே தயாரிக்கிறார்.
ரஜினி படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள ரஜினியிடம் கலைப்புலி எஸ்.தாணு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ரஜினி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் தொடங்கவிருக்கும் விஜய் படத்தின் தொடக்கவிழாவில் ரஜினி கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
ராஜா ராணி படத்தின் வெற்றியை, இயக்குநர் அட்லீ, உலகநாயகன் கமல்ஹாசனுக்கு டெடிகேட் பண்ணுவதாக, படத்தின் சக்சஸ்மீட்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.