ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்சினிமாவில் கே.வி.ஆனந்துடன் இனைந்து கோலோச்சிவரும் இரட்டை இயக்குனர்களான சுபா போல, மலையாளத்தில் பாபி-சஞ்சய் என்கிற இரட்டை கதாசிரியர்கள் ரொம்பவே பிரசித்தம். இவர்களது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் 'மும்பை போலீஸ்' போல அதிரடி போலீஸ் கதையையும் எழுதுவார்கள். 'ஹவ் ஓல்டு ஆர் யூ' போல பெண்களின் சுய முன்னேற்றத்துக்கான கதையையும் எழுதுவார்கள்.. லால்ஜோஸ் போன்ற பேமிலி செண்டிமெண்ட் இயக்குனர்களுக்கும் கதை எழுதுவார்கள். குறிப்பாக மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸின் வலது மற்றும் இடது கைகள் என்றுகூட இவர்களை சொல்லலாம்.
இப்போது இவர்களைப்பற்றி சொல்வதற்கு விஷயம் இருக்கிறது. அதாவது தமிழில் 36 வயதினிலே' படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியின்போது சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். அனேகமாக இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகலாம். இந்தப்படத்திற்கான கதையை எழுதப்போகிறவர்கள் இந்த பாபி-சஞ்சய் தான். கமலும் இதுபற்றி இந்த கதாசிரியர்களிடம் பேசியுள்ளாராம்..