தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
ராதிகா தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் 'மாரி' படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் வழக்கம்போல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாரி படத்தின் டிரைலர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தனுஷ் ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல் சிம்பு நடித்திருக்கும் 'வாலு' படமும் ஜூலை-17 அன்று ரிலீசாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே 'வாலு' படத்தின் டிரைலர் வெளியாகிவிட்டது. ஆனாலும் அதை மக்கள் மறந்துபோய்விட்டனர். இதை சிம்புவும் உணர்ந்துவிட்டார் போலிருக்கிறது. எனவே, வாலு இப்படத்தின் இரண்டாவது டிரைலரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்துக்காக கேரளா சென்றிருந்த சிம்பு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
வந்தகையோடு, 'வாலு' படத்தின் புதிய டிரைலரை கட் பண்ண உட்கார்ந்துவிட்டாராம்.! 'மாரி' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாக இருப்பதாக தகவல் அடிபடுகிறது. மாரி டிரைலர் வெளியாகும் அதே நேரத்தில் அல்லது ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு 'வாலு' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாக இருக்கிறது. இதனால் சமூகவலைத்தளங்களில் தனுஷ், சிம்பு ரசிகர்களிடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.