கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
கடந்த மாதங்களில் வெளியான படங்களில் சற்றே வித்தியாசமாக கதைஅம்சம் கொண்ட படம் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். படத்தின் தலைப்பு போலவே கதை அம்சமும் வித்தியாசமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வாங்கி வெளியிட்டதால் வெற்றிப்படமாக அமைந்தது. 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' இயக்குனர் ராம் பிரகாஷ் அடுத்து இயக்கும் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். 'யான்' படத்தின் படுதோல்விக்குப் பிறகு ஜீவாவை யாருமே இயக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் தன் மானேஜர் பெயரில் அவரே திருநாள் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
கருணாஸ் ஹீரோவாக நடித்த 'அம்பா சமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் திருநாள் படத்தை இயக்குகிறார். தனக்கு பிரேக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய சம்பளம் கொடுத்து நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கி உள்ளார் ஜீவா. 'திருநாள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அடுத்து 'யாமிருக்க பயமே' டீகேயின் இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இந்த இரண்டு படங்களை அடுத்து தற்போது 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. திருநாள், கவலை வேண்டாம் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்திற்கான வேலைகள் துவங்குமாம். ஆக்ஷன், காமெடி கலந்த இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது.