புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஏப்ரல் மாதத்தில், கிழக்குக் கடற்கரைச்சாலை, மெர்குரிப்பூக்கள் ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்ததாலோ என்னவோ ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே மணிரத்னத்தின் ராவணன் படத்தில் அவரிடம் உதவியாளராக பணியாற்றினார். பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கதை விவாதங்களில் பங்கெடுத்து வந்தார்.
இந்நிலையில், கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனம் ஒன்று பெரும் பணத்துடன் படம் தயாரிக்க முன் வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படம் தயாரிக்க முன் வந்த அந்த நிறுவனம் முதல் தயாரிப்பாக சரவணன் இயக்கத்தில் ஜெய் நடித்த வலியவன் என்ற படத்தைத் தயாரித்தது. எஸ்.கே. ஸ்டுடியோஸ் என்ற அந்த நிறுவனத்தில் அடுத்த படத்தை இயக்குவதற்கு எஸ்.எஸ்.ஸ்டான்லியை சிபாரிசு செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் எஸ்.கே.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ஆதாமின் ஆப்பிள் என்ற படம் தயாராக இருந்தது. ஆனால் வலியவன் கொடுத்த தோல்வியால், எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் எடுக்கவிருந்த ஆதாமின் ஆப்பிள் படத்தை ட்ராப் செய்துவிட்டதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது.