மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறவர் கலைராணி. அவரின் அழுகை தமிழ் சினிமாவில் பாப்புலர். அவர் தற்போது நடிப்பு பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் நடிப்பு கற்ற சிரிஷ் சரவணன் என்ற மாணவர் இப்போது ஹீரோவாகியிருக்கிறார். இது பற்றி சிரிஷ் சரவணன் கூறியதாவது:
நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் லயோலா கல்லூரியில் விஷ்காம் படித்தேன். ஒரு நடிகனுக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்ற பிறகே நடிப்பு வாய்ப்பு தேட வேண்டும் என்று நினைத்தேன். கலைராணி மேடம் நடத்தி வரும் நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பு படித்தேன். ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம் கற்றேன். பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை கற்றேன். என்னை முழுமையாக தயார் செய்த பிறகு வாய்ப்பு தேடினேன்.
ஆள் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் தனது மெட்ரோ படத்துக்கு ஆடிசன் நடத்துவதாக கேள்விப்பட்டு கலந்து கொண்டு செலக்ட் ஆனேன். எனக்கு ஜோடியாக ப்ரீத்தி நடித்துள்ளார். பாபி சிம்ஹா, செண்ட்ராயன் நடிக்கிறார்கள். தங்க கடத்தல் பற்றிய படம். தங்கம் சமூக விரோதிகள் கையில் சிக்கி என்ன வேலைகளைச் செய்கிறது என்கிற கதை. இந்தப் படம் எனக்கு சினிமாவில் நல்ல துவக்கத்தை தரும் என்று நம்புகிறேன். என்றார்.