பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஏபிசிடி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வௌிவந்துள்ள படம் ஏபிசிடி-2. ரெமோ டிசோசா இயக்கத்தில், வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபுதேவா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி கடந்த வௌ்ளிக்கிழமை வௌியானது ஏபிசிடி-2. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.14.30 கோடி வசூல் செய்துள்ளது. 2015ம் ஆண்டில் வௌியான படங்களில் முதல்நாளில் அதிகளவு வசூலை கொடுத்த படமாக ஏபிசிடி-2 இருந்துள்ளது. முதல்நாள் மட்டும் தொடர்ந்து சனிக்கிழமை ரூ.14.51 கோடியும், ஞாயிறன்று ரூ.17.51 கோடியும், ஆக மொத்தம் மூன்று நாளில் ரூ.46.32 கோடியும் வசூலித்துள்ளது. இத்தனைக்கும் மும்பையில் கடுமையான மழை பெய்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலிலும், திரையரங்குகளில் இப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.