தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை: பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக தன் சம்பந்தி கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுவுக்குப் பதிலளிக்க ரஜினி தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா தாக்கல் செய்த மனு:
சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா என்னிடம் முதலில் 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அடுத்ததாக 25 லட்சம் ரூபாய் கேட்டார்; நான் மறுத்தேன். அப்போது நடிகர் ரஜினி எனக்கு சம்பந்தி; நீங்கள் கவலைப்பட வேண்டாம்; பணத்தை நான் திருப்பித் தருவேன். இல்லையென்றால் அவர் தருவார் என்றார். எழுத்துப்பூர்வமாக எழுதியும் கொடுத்தார். அதன்பின் 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். வாங்கிய பணத்திற்கு இரண்டு காசோலைகள் வழங்கினார். அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தன.
உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் ரஜினி தரப்பில் பதிலளிக்கும் போது எந்த பரிவர்த்தனைக்கும் தன் பெயரைப் பயன்படுத்த கஸ்துாரி ராஜாவுக்கு அனுமதியளிக்கவில்லை என கூறியிருந்தார். பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக கஸ்தூரி ராஜா மீது ரஜினி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை எடுக்காததால் அவர்கள் இருவருக்கும் இடையே கூட்டு நடவடிக்கைகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறேன். எனவே பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் ரஜினிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. ரஜினி தரப்பில் வழக்கறிஞர் அருண் மோகன் நோட்டீஸ் பெற்றார். கஸ்தூரி ராஜா தரப்பில் பதிலளிக்க அவரது வழக்கறிஞர் அவகாசம் கோரினார். விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை, கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிகருமான தனுஷ் திருமணம் செய்துள்ளார்.