மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
அட்டகத்தி தினேஷ்- மாளவிகா மேனன் ஆகியோர் கண் பார்வை இல்லாதவர்களாக நடித்த படம் குக்கூ. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையில் கோடையில் -என்ற பாடலை முதன்முதலாக தமிழில் பாடியவர் கேரளத்து பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கண் பார்வை இல்லாதவரான இவர், அதைத் தொடர்ந்து என்னமோ ஏதோ படத்தில் டி.இமானின் இசையில் புதிய உலகை, காடு படத்தில் உச்சிமலை காடு, வெள்ளக்காரதுரை படத்தில் காக்கா முட்டை, இடம்பொருள் ஏவல் படத்தில் எந்த வழி -என பல படங்களில் பாடியிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது விதார்த்- கிருஷ்ணா நடித்துள்ள விழித்திரு படத்தில் ஆலை அலை மீது -என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் வைக்கம் விஜயலட்சுமி. நிஜத்தில் கண் பார்வை இல்லாதவரான இவர், விழித்திரு படத்தில் பார்வையற்றோரின் உணர்வுகளை வலிகளை உணர்த்தும் வகையிலான சூழலில் இந்த பாடலை பாடியிருக்கிறாராம்.