ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் 10 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து. இதில் விஷால் தன் தந்தை ஜி.கே.ரெட்டி, தாய் மற்றும் சகோதரி ஐஸ்வர்யா ஆகியோருடன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:
நான் விளம்பரத்திற்காக இந்த திருமணங்களை நடத்தி வைக்க வில்லை. எனது ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆற்றும் பணிகளில் இதுவும் ஒன்று. இதை பார்த்து மற்றவர்களும் செய்ய வேண்டும். இன்று திருமணம் செய்துள்ள அனைவரும் என் சகோதரிகள் அவர்களை மாப்பிள்ளைகள் கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறார்களா என்பதை நானும் கவனித்துக் கொண்டிருப்பேன்.
சினிமாதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. அதற்கு ஒரு நாளும் நான் துரோகம் செய்ய மாட்டேன். துரோகம் செய்பவர்களை விடவும் மாட்டேன். நடிகர் சங்க தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. பின்வாங்க மாட்டேன். நாடக நடிகார்களின் நிலையை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்காக பாடுபடுவேன்.
மதுரையில் நாடக நடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல்நாட்டு விழா விரைவில் நடக்கும்.
நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் வரை விஜயகாந்த் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் அரசியலுக்கு சென்றதும் சங்க பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். சரத்குமார் இதை புரிந்து கொண்டால் நல்லது. அரசியல் கட்சியில் இருப்பவர்கள் சங்கத்தில் இருந்தால் சங்கத்திலும் அரசியல் இக்கத்தான் செய்யும். நடிகர் சஙகத்திற்குள் அரசியலை நுழைய விடக்கூடாது. இவ்வாறு விஷால் பேசினார்.