விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் என்ற கேரக்டரில் நடிக்கிறார் கமல். த்ரிஷ்யம் மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் அதே கதையில் அப்படியே நடித்தால் புதிதாக தான் எதையும் செய்ய முடியாது என்பதற்காக திருநெல்வேலியில் நடப்பது போன்று அந்த கதைக்களத்தை மாற்ற வைத்திருக்கிறார் கமல். அதோடு, இந்த படத்தில் திருநெல்வேலிக்காரராக டோட்டலாக மாறி விட வேண்டும் என்பதற்காக, படத்துக்கு வசனம் எழுதிய ஜெயமோகன், சுகா ஆகியோரிடம் திருநெல்வேலி மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்புகளை பயிற்சி எடுத்து நடித்த கமல், அங்குள்ள மக்கள் வேஷ்டி, லுங்கி கட்டுவது போன்று தானும் கட்டிக்கொண்டு நடித்திருக்கிறார். அந்த வகையில், முழுமையான சுயம்புலிங்கமாக மாறியிருக்கிறார் கமல்.
மேலும், இந்த படத்தில் கமலின் முதல் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க, இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருக்கிறார். இவர் மலையாள திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்தவர். அதையடுத்து, அதே படம் தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக்கான போதும் நடித்தவர், இப்போது தமிழிலும் அதே வேடத்தில் நடித்திருக்கிறார்.