டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸம்போர்டும் (அறநிலையத்துறை) இணைந்து ஆண்டு தோறும் மத ஒற்றுமைக்காக பாடுபடுபடுகிறர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு அந்த விருது பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடந்த எளிய விழாவில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் எஸ்.வி.சிவகுமார் விருதினை வழங்கினார். விழாவில் மாநில அமைச்சர்கள், தேவசம்போர்டு அதிகாரிகள். அய்யப்பன் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது: பல மொழிகளில் அய்யப்பன் பாடல்களை பாடியிருக்கிறேன். இன்றுதான் அய்யப்பன் சன்னிதானத்துக்கு வந்திருக்கிறேன். விருது வாங்கத்தான் வர வேண்டும் அய்யப்பன் தீர்மானித்திருப்பதாக கருதுகிறேன். என் வாழ்க்கையில் நான் பெற்ற விருதுகளில் மிகச் சிறந்ததாக இந்த விருதைக் கருதுகிறேன். கேரள மக்கள் என்னை தங்கள் சொந்த சகோதரனாக கருதுகிறார்கள், மகனாக மதிக்கிறார்கள். எல்லா மொழியிலும் பாடுகிறேன். எல்லா மொழி மக்களும் என்னை நேசிகிறார்கள். இசைதான் என் தாய்மொழி. என்று உருக்கமாக பேசினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.