ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகம் முழுவதும் உள்ள தமிழ் பாடகர் பாடகிகளை சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மேடையேற்றி வருகிறது விஜய் டிவி. இதில் பல சுற்றுகளை நடத்தி அதில் சிறந்த பாடகர்களை தேர்வு செய்து இறுதியாக அவர்களில் முதல் மூன்று இடங்களில் வருபவர்களுக்கு பெரிய அளவில் பரிசுகளை கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறது.
மேலும், பாட வருபவர்களுக்கு அனந்து என்கிற பழம்பெரும் இசைக்கலைஞரைக்கொண்டு முறையான பயிற்சி கொடுத்த பிறகே மேடையில் ஏற்றி பாட வைக்கிறார்கள். அப்படி பாடுபவர்களில் சிறப்பாக பாடும் பாடகர்களுக்கு மதிப்பெண் கொடுக்க பின்னணி பாடகர்கள் சித்ரா, மனோ, சுபா அடங்கிய ஒரு நடுவர் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி விஜய் டிவியில் திறமை வாய்ந்த நல்ல குரல்வளம் கொண்ட இளம் பாடகர் பாடகிகள் பங்கேற்று வருவதால் சமீபகாலமாக வித்தியாசமான குரலை தேடும் சினிமா இசையமைப்பாளர்கள், விஜய் டிவியில் பாடுபவர்களை அழைத்து சினிமாவில் பாட வைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஏற்கனவே பலர் சினிமாவில் பாடி வரும் நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் 4வது சீசனில் பாடிய நமீதா என்ற கேரளத்து பாடகியும் அதர்வா நடித்துள்ள சண்டிவீரன் படத்தில் பாடியுள்ளார். அப்படத்துக்கு இசையமைத்துள்ள கோலிசோடா இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி நமீதாவுக்கு, அலுங்குறே குலுங்குறே என்ற பாடல் பாடும் வாய்ப்பினை கொடுத்து சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறார். இதையடுத்து மேலும் சில இசையமைப்பாளர்களின் இசையில் அடுத்தடுத்து பாடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார் பாடகி நமீதா.